கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் இந்த ஆண்டுதிருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
நாளை மாலை 5 மணியளவில் நெடுந்தீவு பங்கு தந்தை எமிழிபால், அந்தோணியாரின் திரு உருவம் பதித்த கொடியை ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் ஏற்றுகிறார்.தொடர்ந்து ஆலயத்தை சுற்றி பெரிய மரத்தால் ஆன சிலுவைகளை தமிழ்நாடு மற்றும் இலங்கை பக்தர்கள் சேர்ந்து தூக்கி வர 14 இடங்களில் சிலுவை பாதை திருப்பலி பூஜை நடைபெற்று திருவிழா திருப்பலி பூஜைகளும் நடைபெறுகின்றன. தொடர்ந்து இரவு 8 மணியளவில் அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேரை இரு நாட்டு மக்களும் மற்றும் இலங்கை கடற்படையினரும் சேர்ந்து தூக்கி ஆலயத்தை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடக்கம்