இது குறித்து மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது: ஊரடங்கு மற்றும் தொற்றுநோயால் மக்கள் நெருக்கடி நிலையில் வாழ்கின்றனர்

இது குறித்து மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது: ஊரடங்கு மற்றும் தொற்றுநோயால் மக்கள் நெருக்கடி நிலையில் வாழ்கின்றனர். பட்டாசுகளை வெடிக்க யாரும் அவர்களிடம் கேட்கவில்லை. இருப்பினும், அவர்கள் அவ்வாறு செய்தால், அதில் என்ன தீங்கு இருக்கிறது? இது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. காற்றின் தரம் மோசமடைந்ததாக கூறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். ஆண்டு முழுவதும் மாசு உச்சத்தில் இருக்கிறதே, அதை என்ன சொல்கிறீர்கள்? இந்த சம்பவத்திலிருந்து ஒரு பிரச்சினையை உருவாக்க வேண்டாம் என்று எல்லோரிடமும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே திரிணாமுல் காங்., மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி தனது டுவிட்டர் பதிவில், ‛ஒரு தொற்றுநோயைக் கொண்டாடிய முதல் நாடு இந்தியா. பட்டாசுகள், ஆடம்பரமான விளக்குகள் மற்றும் வானவெடிகள் மூலம், ஒரு தொற்றுநோயான கொரோனாவை கொண்டாடும் முதல் தேசமாக நாம் மாறிவிட்டோம். இதைக் கையாள எத்தனை பேர் உண்மையில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றினார்கள் என்பதையும் நான் சிந்திக்கிறேன். சுய தனிமையா அல்லது சுய அழிவா?,' என பதிவிட்டுள்ளார்.


Popular posts
ஏப். 13ல் சபரிமலை நடை திறப்பு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது
பிரதமர் மோடி வேண்டுகோளுக்கு இணங்க நாடு முழுவதும் ஏப்.,5ம் தேதி இரவு 9 மணிக்கு
சபரிமலை நடை ஏப்., 13 மாலை திறக்கப்படுகிறது. 'ஐந்து நாட்கள் நடைபெறும் பூஜைகளில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை' என, தேவசம் போர்டு அறிவித்துள்ளது
020-ம் ஆண்டிற்கான பணக்கார இந்தியர்களில் முதலிடத்தை தொழிலதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவருமான முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளதாக போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டுள்ளது
Image
தலைவருமான முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளதாக போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டுள்ளது