விழாவையொட்டி வருகிற 21-ந் தேதி 8 திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா

விழாவையொட்டி வருகிற 21-ந் தேதி 8 திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 2-ம் நாள் சூரியபிரபை வாகனத்திலும், சந்திரபிரபை வாகனத்திலும், 3-ம் நாள் பூத வாகனத்திலும் மற்றும் காமதேனு வாகனத்திலும், 4-ம் நாள் கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 5-ம் நாள் வெள்ளி ரி‌‌ஷப வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27-ந்தேதி வெள்ளி மஞ்சத்திலும், 28-ந் தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 29-ந் தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சே‌‌ஷ வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

30-ந்தேதி காலை நடராஜர் ஊடல் உற்சவம், நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை ஏகசிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சொக்கர் உற்சவம், மவுனோத்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.

ஏப்ரல் 9-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர்.


Popular posts
பணக்கார இந்தியரில் முகேஷ் அம்பானி முதலிடம் : போர்ப்ஸ் பட்டியல் வெளியிடு
Image
020-ம் ஆண்டிற்கான பணக்கார இந்தியர்களில் முதலிடத்தை தொழிலதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவருமான முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளதாக போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டுள்ளது
Image
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடக்கம்
Image
இது குறித்து மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது: ஊரடங்கு மற்றும் தொற்றுநோயால் மக்கள் நெருக்கடி நிலையில் வாழ்கின்றனர்
பிரதமர் மோடி வேண்டுகோளுக்கு இணங்க நாடு முழுவதும் ஏப்.,5ம் தேதி இரவு 9 மணிக்கு